தமிழகம்

தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான்.. அமைச்சர் எ.வ.வேலு புது விளக்கம்!

வேலூரில் ஏழு தளங்களுடன் சுமார் 198 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதையும் படியுங்க: போதையின் பிடியில் தமிழ் திரையுலகம்? ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து சிக்கிய மற்றுமொரு நடிகர்!!

பின்னர் அவர் அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மற்றும் முருகன் மாநாட்டில் பெரியார் குறித்து வெளியிடப்பட்ட காணொளி குறித்து கேட்டதற்கு, பார்க்கப்போனால் தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவர் நான்தான்.

ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது என் பெயரில் வேல் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அறநிலையத்துறை சார்பில் ஓராண்டுக்கு முன்பு முத்தமிழ் முருகன் சிறப்பான மாநாடு பழனியில் நடத்தப்பட்டது.

அதில் எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. அந்த மாநாடு சிறப்பாக அமைந்தது அனைத்து தரப்பினரும், அனைத்து அடிகளார்களும் கலந்து கொண்டார்கள். அதில் அரசியல் சாயங்கள் எதுவும் இல்லை.

ஆனால் மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டு நடத்தப்பட்டது. அரசியல் நோக்கம் தான் அவர்களின் முழுமையான முழுமையான முழுமையான நோக்கம்.

அவர்கள் போட்ட தீர்மானமே அரசியல் உள்நோக்கத்தோடு உடையது தான்.
முருகன் மாநாட்டுக்கும், இந்துக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.

ஆக தேர்தலுக்காக போடப்பட்ட மாநாட்டில் எப்படி எங்கள் முதல் தலைமுறையாய் இருக்கிற பெரியாரையும், அண்ணாவையும் ஏற்றுக் கொள்வார்கள்.

அவர்கள் நோக்கம் முருகன் வெளிப்படுத்துவது அல்ல. அவர்களைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்காக அந்தந்த மாநில கடவுள்களை கையில் எடுப்பார்கள்.

அந்தந்த மாநிலத்தில் உள்ள கடவுளை முன்னிறுத்தி பின்னால் அரசியல் செய்பவர்கள் இவர்கள். பெரியாரையோ, அண்ணாவையோ பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் மாட்டோம் அவர்களும் அதை செய்ய மாட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் தேர்தல் நேரத்தில் அதற்குரிய பங்களிப்பை செலுத்துவார்கள்.

முதல்வர் ரோட்சோ இருக்குதா என கேட்டதற்கு,பொதுமக்களை சந்திப்பதன் பொருள் என்ன, மக்களை சந்திப்பது தான் அதன் பொருள் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

3 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

4 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

4 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

5 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

6 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

7 hours ago

This website uses cookies.