கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வெட்டூர்ணிமடம், களியங்காடு, கோணம், பார்வதிபுரம் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் வராததால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்விசிறிகளை இயக்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
கோட்டார் பகுதியில் இரவு 10 மணிக்குப்பிறகு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், கடை ஊழியர்களும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். இதேபோல் குலசேகரம், வெண்டாலி கோடு, மாமூடு, பொன்மனை, திற்பரப்பு, திருநந்திக்கரை பகுதிகளில் மாலை 6 மணிக்கு சென்ற மின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் வந்தது. 5 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மின்வாரிய ஊழியரிடம், மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர், மின்சாரம் எப்போது வரும் என்று எங்களுக்கு தெரியாது.
மந்திரிகளிடம் தான் போய் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார். மின்வாரிய ஊழியரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் மின்தடை குறித்து பல்வேறு கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
மின்தடை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.