கோவை : கோவையில் காணாமல் போன தனது ஆட்டோவை ஓட்டுனர் ஒருவர் வீதி வீதியாக தேடி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 25 வருடமாக காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி பூ மார்க்கெட் பகுதியில் அமுதசுரபி உணவகம் எதிரே ஆட்டோவை நிறுத்தி விட்டு கணேசன் உணவு அருந்த சென்றுள்ளார்.
இந்த நிலையில் சரியாக 10 மணியளவில் மர்ம நபர் அவரது ஆட்டோவை லாவகமாக தள்ளிச் சென்று உள்ளார். அதன் பின்னர் கணேசன் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவை அலைந்து தேடியுள்ளார்.
பின்னர் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே காணாமல் போன ஆட்டோவை தேடி காந்திபுரம், கவுண்டம்பாளையம், வடகோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நடந்து ஆட்டோவை தேடி வருகிறார்.
இந்த நிலையில், தனது வாழ்வாதாரம் ஆட்டோ மட்டுமே என்றும், எப்படியாவது தனது ஆட்டோவை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கிறார் கணேசன்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.