Categories: தமிழகம்

வெட்கங்கெட்டவர்களை பற்றி பேசவே எனக்கு கேவலமாக இருக்கு : ஓபிஎஸ் குறித்து கே.பி முனுசாமி ஆவேசம்!!!

இந்தியாவை திரும்ப பார்க்கின்ற வகையில், வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என்று கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரையில் மாநாட்டிற்கான இடத்தை கழக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழகத் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, கழகத் தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் ,முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை சுற்றுச்சாலை அருகில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர் .அதனைத் தொடர்ந்து கழக துணை பொதுச்செயலாளர் கே.பி .முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அதிமுக வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்  மூன்றாம் தலைமுறையாக ,ஒன்றரை கோடி தொண்டர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, ,வருகின்ற  ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கான  மூன்று இடங்களில் பார்த்துள்ளோம் .இதன் தொடர்பாக கழகப்பொதுச்செயளாலர்  எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். அவர் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டிற்கான பணியினை துவக்கப்படும்.

திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில், ஏழை, எளிய அடித்தள மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. 

அம்மாவின் ஆட்சியில் கருவில் உள்ள குழந்தை முதல், கல்லறை செல்லும் மனிதர் வரை, வயதிற்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை செய்தோம் அந்த திட்டங்கள் எல்லாம் நீக்கியது தான் திமுகவின் சாதனையாகும். எந்த ஒரு புதிய திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை.

ஏற்கனவே நிதி அமைச்சர் பி.டி..ஆர் தியாகராஜன் ரெண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில், முதல்வர்  மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த கருப்பு பணத்தை, எப்படி வெள்ளை பணமாக தடுமாறி கொண்டு வருகிறார்கள்  என்று  சொல்லி உள்ளனர்.

பன்னீர்செல்வம் ,சபரீசம் சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , வெக்கங்கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது என கூறினார். நடைபெற்ற திமுக கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜனுக்கு ஸ்டாலின் பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டதற்கு, இரண்டு ஆண்டு சாதனை என்று மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் .அவர் அடிமனத்தில் பயம் வந்துவிட்டது. உண்மை சூடும் என்பது போல் ,பி.டி.ஆர் தியாகராஜன் மூலமாக இன்றைக்கு வெளிவந்துள்ளது. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. திமுகவினர் சட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். இது குறித்து கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் ஊடகங்கள் வாயிலாகும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கூறி வருகிறார்.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு ரவுடிகள் உயர்ந்துள்ளனர். மணல் கொள்ளையில் திமுக நிர்வாகிகள் உள்ளனர். கண்டிப்பான முறையில் செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை  கொலை செய்துள்ளனர் .சட்டத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளதால், கொலை செய்தவர் யார் இன்று இதுவரை கொண்டுவரப்படவில்லை என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

8 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

8 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

8 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

9 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.