Categories: தமிழகம்

யாரை துரத்தி அடிக்கப்போறாங்கனு பார்க்கலாம்.. என் வேலையை பற்றி எனக்கு தெரியும் : அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!

யாரை துரத்தி அடிக்கப்போறாங்கனு பார்க்கலாம்.. என் வேலையை பற்றி எனக்கு தெரியும் : அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!

தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.

மத்திய அரசை குறை சொல்ல மாநில அரசு என்ன செய்தீர்கள்? திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது எனவும் குற்றம் சாட்டினார் தமிழிசை சௌந்தரராஜன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழிசை செளந்தரராஜன் பாண்டிச்சேரியுடைய ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள் என்று காட்டமாக கூறினார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், நான் ஆய்வு செய்வதற்காக போகவில்லை என்றார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, என்னை வேலை செய்ய சொல்வதற்கு அமைச்சர் சேகர்பாபுவுக்கு எந்த உரிமையும் இல்லை. அவரவர் வேலையை சரியாக பார்த்தால் நான் ஏன் என்னுடைய வேலையை விட்டுவிட்டு தமிழகம் வரப்போகிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே சென்றேன். நான் ஏற்கனவே அங்கு போட்டியிட்டிருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களை சந்திக்க போனேன்.

நான் பார்த்தது வரை தென் மாவட்ட பேரிடரை எதிர்கொள்வதில் மாநில அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. இதனை சொன்னவுடன் தான் அண்ணன் சேகர்பாபுவுக்கு கோபம் வருகிறது… பதற்றப்படுகிறார். எங்கே போட்டியிட்டாலும் துரத்தியடிப்போம் என்கிறார். இதெல்லாம் நடக்கவே நடக்காது.

பாஜக செய்தித் தொடர்பாளர் போல பேசுகிறேன் என சேகர் பாபு கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை மக்களின் செய்தித் தொடர்பாளராக நான் பேசுகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால் நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருப்போம் என ஏரல் போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

எனக்கு இங்கு என்ன வேலை என்று எல்லோரும் கேட்கிறார்கள். சபாநாயகர் அப்பாவு கேட்டதற்கு சொல்கிறேன், நான் ஆய்வுக்காக வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்தேன், எனக்கு தமிழகத்தில் வேலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

2 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

47 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

48 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

1 hour ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.