தமிழகம்

அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!

தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அதன் பொருட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்திருந்த அஜித்குமார் தம்பி நவீன் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்புவனம் காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் தரப்படுவதாக கூறப்படுகிறது அதற்காக உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம்.

இதையும் படியுங்க: புகார் அளித்து 4 நாள் ஆச்சு.. அண்ணாமலைக்கு ஆதரவாக மீண்டும் ஆதரவாளர் ராஜினி கோரிக்கை!

தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி உள்ளது. ஆகையால் அருகில் உள்ள மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதுகுறித்து நான் வேண்டுகோள் வைத்துள்ளேன் ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அரசாங்க தரப்பில் இருந்து இல்லை. உயர் அதிகாரிகளின் அழுத்தமின்றி இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்காது ஆகையால் அவர்களையும் விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தமிழக அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா அமைந்துள்ள இடம், வளர்ச்சி அடையாத பகுதி. ஆகையால் இந்த ஒதுக்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. வீட்டுமனை என்பதை விட சித்திரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

தற்போது இந்த வழக்கில் உள்ள முக்கியமான சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது வரவேற்கத்தக்கது என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை? இன்ஸ்டா பதிவால் ஏற்பட்ட களேபரம்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே…

34 minutes ago

புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் காலி! மாஸ் காட்டும் அனிருத்?

அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…

1 hour ago

ஸ்டாலின் ஆட்சி Simply Waste : கோவை சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…

1 hour ago

அவங்களை உள்ள விடாதீங்க… அமைச்சர்களை தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு!

புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…

2 hours ago

பண மோசடி வழக்கு; மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் திடீர் கைது? அதிர்ச்சியில் திரையுலகம்!

பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…

2 hours ago

ஸ்ரீகாந்துக்கும் கிருஷ்ணாவுக்கும் ஜாமீன் கூடாது- கறார் காட்டிய காவல்துறை! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்?

போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…

3 hours ago

This website uses cookies.