வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது இந்த விழாவிற்கு முன்னால் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் இளங்கோ சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் பங்கேற்றுந்தனர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது..
17ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கி பேரூரை ஆற்றி சிறப்பிக்க உள்ளார்.
இந்த விழா நாம் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய நம் குடும்ப விழா. 2026சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் எழுச்சி விழா.நான் ஏற்கனவே ஆசைப்பட்டது கழகத்தின் பவள விழாவை நடத்திட வேண்டும் என என் மனது உள்ளூர தீரத ஆவல் இருந்தது.
ஆனால் அந்த சூழ்நிலையில் நான் இல்லாத நிலையில் தற்போது முப்பெரும் விழாவை நடத்துகிறேன் என நான் கேட்டவுடன் கழக தலைவர் அனுமதி கொடுத்தது நான் பெற்ற பேறு..
முப்பெரு விழா என்பது மாநிலம் முழுவதிலும் இருந்து கழக நிர்வாக பெருமக்கள் பங்கேற்பார்கள்.மாற்றுக் கட்சியினர் பார்த்து வியக்கும் வகையில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும்.
இந்த முப்பெரும் விழா என்பது நமது முதல்வரின் நான்காண்டு சாதனைகளை பறைசாற்றும் வகையில் அமைய வேண்டும்.தனது ஆட்சித் தலைமை மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும் தலைவரின் புகழைப் பறைசாற்றும் விதமாகவும் இருக்க வேண்டும்.
நம்முடைய முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொடுத்துள்ளார் இந்த முப்பெரும் விழாவில் மாபெரும் வெற்றியடைய செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என பேசினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.