Categories: தமிழகம்

அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனு சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனா சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட அறநிலையத்துறையால் கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடங்களுக்கு கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி வர வேண்டி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறிவிட்டு, அதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் கோயில் வருமானங்கள் மூலம்தான் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் 2 உதவியாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் சம்பளமாம். என்ன சார் அநியாயம் இது.. கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக அறநிலையத் துறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறாங்க.
இதையெல்லாம் சொன்னால் நான் விளம்பரத்திற்காக செயல்படுவதாக குற்றம்சாட்டுறாங்க,.. விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது.
இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள்.

அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும். அர்ச்சகர்கள் இல்லை என்றால் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படும்.

எந்த வேலையும் செய்யாத அதிகாரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளமாம். ஆனால், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு வெறும் 4500 ரூபாய்தான் சம்பளம் என்கிறார்கள்.

வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று உள்ளது. பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழிந்துவிடும்.

சைவ வைணவர்களின் ஒற்றுமை உடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க காவல்துறையுடன் சிலைகளை மீட்க ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க நடவடிக்கைவேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் அமர்த்தக்கூடாது. மிகவும் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக அறநிலையத்துறை உள்ளது.

ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை நான் செய்யவில்லை. கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர்.

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்.

அறநிலையத் துறை பற்றி பேசினால் நான் பாஜகவில் சேரப்போவதாகவும் பதவிகளைப் பெறப்போவதாகவும் சொல்கிறார்கள். நான் எந்தக் காலத்திலும் கட்சியில் சேரமாட்டேன். அப்படி சேர்ந்தால் என் சட்டைக் காலரை பிடித்து நீங்கள் கேள்வி தாராளமாக கேட்கலாம்” என பொன் மாணிக்கவேல் ஆவேசமாக பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

11 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

11 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

12 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

12 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

12 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

13 hours ago

This website uses cookies.