தமிழகம்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி அழிந்துவிடும் : கரூர் எம்பி ஜோதிமணி விமர்சனம்.!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்றக் கட்டமைப்பின் கீழ் வருவதால், அந்த பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. இது கிராமப்புற மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இந்த அணுகுமுறை மனசாட்சியற்றது.

மணப்பாறை பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி அவசியமாக இருப்பதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டப்பணிகள் விரைவில் நடைபெறுவதில் மகிழ்ச்சி. ஆனால் ஒன்றிய அரசு நிதியை முறையாக வழங்காததால், பல திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்று மணல் கொள்ளை விவகாரம் குறித்து, “ஆற்று மணல் எடுக்கக்கூடாது என்பது என் தெளிவான நிலைப்பாடு. கட்டிடத் தொழில்நுட்பத்தில் மாற்று வழிகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டலாம்.

அத்துடன், நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதையும், மணல் கொள்ளையை தடுப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அமலாக்கத்துறையின் செயல்பாடு “எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்கிறது. தமிழகத்தில் அமலாக்கத் துறையின் தலைமையகம் இருப்பதுபோல் நிலை உள்ளது.

பாஜகவின் இரட்டைக் கொள்கைகள் குறித்து, “பாஜகவினர் ஊழல்வாதிகள் என கூறுபவர்கள் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டால் புனிதர்கள் ஆகிவிடுகின்றனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் அதிக ஊழல் நடைபெறுகிறது.“தமிழகத்தில் ஊழல் அதிகம் என அமித்ஷா கூறுவது அரசியல் நோக்கமுடையது,”

இந்தியா கூட்டணி குறித்து கேள்விக்கு, “பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அனைத்தும் அழிந்துள்ளன. அதேபோல் அதிமுகவிற்கும் அதே நிலை ஏற்படும்.

“திமுக அரசு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலவகைத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்கள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

“தற்போது இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருப்பதால், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

4 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

5 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

5 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

6 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

6 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

7 hours ago

This website uses cookies.