ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவதை வரவேற்கிறேன் அவருக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்
மீண்டும் குஜராத்துக்கு தான் செல்வார் – சுப. வீரபாண்டியன் பேட்டி
திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் 4வது மாநில மாநாடு திருச்சியில் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டு கருத்தரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில்…
தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு(ri), இளநிலை வரைதொழில் அலுவலர்(Jdo) என பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்களை நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும்.
2022- 2023ஆம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வு வழங்கி உடனடியாக நிரப்ப வேண்டும். சாலைகளின் நீளத்தின் தன்மைக்கு ஏற்ப சாலைப்பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரப்பாண்டியன்,
திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நியாயமான கோரிக்கைகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.
தமிழ்நாட்டில் மதவாதமும், மனுநீதியும் காலூன்ற முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் சமூக நீதி இருக்கும் வரையில் மனு நீதி உள்ளே வர முடியாது.
அண்ணாமலை நடைபயணத்தை ஏற்கனவே ரத்து செய்து விட்டு பெரும்பாலும் வேனில் தான் பயணிக்கிறார்.
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக கூறுகிறார்கள். அவர் அங்கு போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். வேறு எந்த இடத்தையும் விட தமிழ்நாடு தான் சரியான தீர்ப்பளிக்கும். யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம் ஆனால் மக்கள் சரியாக தான் வாக்களிப்பார்கள். வட நாட்டிலேயே மோடியால் வெற்றி பெற முடியுமா என தெரியவில்லை தமிழ்நாட்டில் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
வாரணாசியில் போட்டியிட்ட அவர் அடுத்து ராமேஸ்வரம் வருவதாக கூறுகிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மீண்டும் குஜராத்துக்கு தான் செல்வார்.
நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என கூறும் பிரதமரை இனி பிரதமராக வைத்திருக்க மாட்டோம் என நாடு முடிவு செய்யும் என்றார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.