திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மா நாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (32) இவர் பிசிஏ படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்து பணி செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜபாண்டியன் தந்தை பாண்டியனுக்கும், தந்தையின் சகோதரி அய்யம்மாள் என்பவருக்கும் சொத்து தகராறு கடத்த ஏழு வருடமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்.
இதனிடையே, இன்று வீட்டில் ராஜபாண்டி மட்டும் இருந்துள்ள நிலையில், அங்கு வந்த சக்திவேல் தனது ஆதரவுடன் சேர்ந்து ராஜபாண்டியை அடித்து உதைத்ததோடு, சம்பட்டியால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.