Categories: தமிழகம்

உண்மையிலே அக்கறை இருந்தா கையெழுத்து போட வேண்டியதுதானே.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!!

உண்மையிலே அக்கறை இருந்தா கையெழுத்து போட வேண்டியதுதானே.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!!

சுதந்திர போராட்ட வீரர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் விமர்சனத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதற்கு பதில் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதற்கு பிறகாவது சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு உண்மையாக அக்கறை இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மக்கள் நினைவிலிருந்து அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என பேசியிருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்தவகையில், அமைச்சர் பொன்முடியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

9 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

10 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

11 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

11 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

12 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

12 hours ago

This website uses cookies.