Categories: தமிழகம்

21 வயது இளைஞருடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த கொடூர செயல் : நள்ளிரவில் தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவுவில் திடீர் திருப்பமாக தாய் உட்பட கள்ளக்காதலை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்துவருபவர் பாலு (42) அவரது அக்கா மகள் துர்காதேவி(21).

இவர் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(31) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஒன்றை வயதில் ரித்திக்கா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டு ஆண்டுக்கு முன் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி துர்காதேவி நிலக்கோட்டை அருகே உள்ள தனது தாய்மாமா பாலுவின் தோட்டத்திற்கு துர்காதேவி அவரது ஒன்றரை வயதி குழந்தையுடன் வந்து தங்கியதாக கூறப்படுகிறது.

அன்று இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும், காணாமல் போன குழந்தையை இரவு முழுவதும் தேடியும் கிடைக்காமலிருக்கவே மறுநாள் காலை குழந்தை, தோட்டத்து வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் பிணமாக மிதந்ததைக் கண்டு அக்கம்பக்த்தினர் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தை ரித்திக்காவின் உடலை மீட்டு நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல்துறையினர், நேரில் சென்று குழந்தையின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ,குழந்தை தானாக தவறி விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தாய் துர்கா தேவிக்கும் நிலக்கோட்டையை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (வயது 21) என்ற வாலிபருடன் கள்ளதொடர்பு இருந்து வந்தததும் சம்பவத்தன்று இரவு அஜையும் துர்கா தேவியும் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றபோது,குழந்தை ரித்திக்காவை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தாய் துர்காதேவி மற்றும் கள்ள காதலன் அஜய் இருவரையும் கைது செய்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பேபி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பாலமுத்தையா, ரவி ஆகியோர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

7 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

8 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

9 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

10 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

11 hours ago

This website uses cookies.