சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் வாடகைத்தாய் விண்ணப்பம் செய்திருப்பதன் பின்னணியில் ஒரு கும்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்தக் கூட்டத்தில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். பின்னர், தீர விசாரித்தபோது, கார்த்திக் என்பவர் உடன் தமிழரசிக்கு திருமணம் ஆனதாக அவர் சமர்பித்த பத்திரிக்கை போலி எனக் கண்டறியப்பட்டது.
அது மட்டுமல்லாமல், அவரது முதல் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த தமிழரசி, அவரது புகைப்படம் மற்றும் பத்திரிக்கையைச் சமர்பித்து இருந்து உள்ளார். எனவே, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தமிழரசியிடம் விசாரணை செய்த மருத்துவக் குழுவினர் தகவல் அளித்து உள்ளனர்.
இதன் பேரில் விசாரணை செய்த போலீசார், இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சு ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தம்பதி, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழைப் பெற்று உள்ளனர். மேலும், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பி உள்ளனர்.
இந்த விருப்பத்தை, தனியார் கருத்தரித்தல் மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கூறி உள்ளனர். இதற்கு 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியதற்கு தம்பதியும் ஒப்புக் கொண்டு உள்ளனர். பின்னர், தம்பதியை பெண் ஊழியர், மஞ்சு மூலம் தமிழரசியிடம் அழைத்து வந்து உள்ளார்.
இதையும் படிங்க: Ex டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில்.. கூண்டோடு சிக்கியது எப்படி?
பின்னர், தமிழரசி கணவரைப் பிரிந்து வாழ்வது, அவரது பொருளாதார நிலையை வைத்து, வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் அல்ல என்றும், நயன்தாரா போன்றோரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறி மூளைச்சலவை செய்து உள்ளார். பின்னர், அதற்கு தமிழரசி ஒப்புக் கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் தான், அதற்கான விண்ணப்ப பரிசீலனையின்போது தமிழரசி சிக்கி, இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சுவும் சிக்கி இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, தனியார் கருத்தரித்தல் மைய பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.