விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பவுன் தாலி செயின், மற்றும் உண்டியலில் இருந்த ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் வழக்கம் போல கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அரகண்டநல்லூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலய உண்டியல் உடைத்து அம்மனின் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஒன்றினை ஆய்வு செய்தபோது அதில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம உருவம் ஒன்று கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இப்பகுதியில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.