ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக பக்தர்களை பதைபதைக்க வைத்தது.
திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ.சந்தியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி இன்று சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்ன கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சந்தி அம்மாள் என்ற பெண்மணி, கடந்த 48 தினங்களாக தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு 48 நாள் விரதம் இருந்த சந்தி அம்மாள் ஒவ்வொரு வடையாக போட்டு தனது இரு கையால் அதனை எடுத்து பக்தர்களுக்கு காண்பித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
திருக்கோவிலில் கூடியிருந்த மக்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு சந்தியம்மனை வழிபட்டனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.