ஆரணியில் விவசாயிகளின் காய்கறிகளை பதப்படுத்த 4 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையம் மது அருந்தி செல்லும் இடமாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அதிக அளவில் கீரைகள் மற்றும் காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்களும் தர்பூசணி, மாம்பழம், வாழை உள்ளிட்டவைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முக்கிய மையமாக விளங்குகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் காய்கறி மற்றும் பழங்களை பதப்படுத்தும் வகையில் தமிழக அரசால் சுமார் 4 கோடி 20 லட்ச ரூபாய் மதிப்பில் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது நாள்தோறும் 20 டன் காய்கறி பழம் வரை அப்பகுதியில் விற்பனை செய்யப்படுவதால் விளைச்சல் அதிகமான காலங்களில் அதனை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராமலேயே அந்த நிலையம் பதப்படுத்தப்படும் குளிரூட்டும் அரை மின்விசிறி மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு பல பொருட்கள் திருடப்படும் உள்ளது.
மேலும், நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மதுபான விடுதியை போன்று மதுபானங்கள் அருந்திவிட்டு அங்கேயே வீசி உடைத்துவிட்டு செல்லும் நிலையில் உள்ளது காவலாளிகள், நிலையத்தை பராமரிக்க தேவையான ஊழியர்கள் ‘சிசிடிவி’ கேமரா போன்ற வசதிகள் செய்யப்படாததால், இங்குள்ள குளிர்சாதன இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவைகளும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது வேளாண்துறை வணிக பிரிவினர் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை முறையாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தியதால் தற்போது இந்த நிலையும் முற்றிலும் வீணாகிப் போனது தொடர்ந்து இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர பல லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய பராமரிப்பின்றி காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் மது பிரியர்களின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது பார்ப்பதற்கே வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.