விழுப்புரம் டவுன் காவல் நிலைய வாயில் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ்செய்து வெளியிடுவது என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. ரீல்ஸ் செய்யும் போது பிறந்த நாள் கேக்குகளை பட்டா கத்தியால் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது எனவும் அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கையும் தமிழக காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பதிவானது விழுப்புரம் பகுதியில் வைரலானதை தொடர்ந்து டவுன் போலீசார் விசாரனை செய்ததில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சார்ந்த கோகுல் என்ற மாணவன் உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தண்ணீர் அருந்த வரும்போது தனது நண்பருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டதது தெரியவந்தது.
இதனையடுத்து இரு மாணவர்களையும் அழைத்து போலீசார் இது காவல் நிலைய வாயில் முன்பு ரீல்ஸ் வீடியோ செய்ய கூடாது என எச்சரிக்கை செய்தும், அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.