அரசு மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் உயிருக்கு பயந்து ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆயிரமடி பகுதியை சேர்ந்தவர் 19வயதான முனுசாமி(19).இவர் அருகிலுள்ள பேனா கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது அம்மாவுடன் வசித்து வரும் நிலையில் கடந்த மூன்று நாடகளாக உணவு உட்கொள்ளாமல் பணிக்கு செல்லாமல் மன அழுத்தத்துடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால் அவரது தாயார் முனிசாமி பணிபுரியக்கூடிய தொழிற்சாலை நண்பர்கள் உதவியோடு வாலாஜாபாத் மருத்துவமனையிலேயே தனது மகனை அனுமதித்திருக்கிறார்.
இந்த நிலையில் அங்குள்ள ஆண்கள் பிரிவிலே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டு இங்கு சகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் தீடிரென கத்தி சத்தம் போட்டு அங்கிருந்த பொருட்கள் சிலவற்றை தள்ளிவிட்டு உடைத்திருக்கிறார்.
இதனால் அச்சமடைந்த சக நோயாளிகள் அப்பிரிவிலிருந்து வெளியேறி பதட்டத்துடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாக தரப்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவமனையின் பாதுகாவலர்கள் உதவியோடு இளைஞரை பிடித்து அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர் போதைக்கு அடிமையாகி உள்ளாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என்பதை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கத்தி கூச்சலிட்டு மருத்துவமனையிலிருந்த பொருட்கள் தள்ளிவிட்டு உடைத்தால் மருத்துவமனையே சற்று பரபரப்புடன் காணப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.