Categories: தமிழகம்

கடைசியா சுடுகாடு செல்ல கூட வழியில்ல… கரும்பு தோட்டத்தில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் : பொதுமக்கள் கவலை!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவனம்பட்டு காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுமார் 25 சென்ட் அளவிற்கு குறைந்த அளவு சுடுகாடு உள்ளது. இதற்கு முறையான பாதை வசதியும் இல்லை.

இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட், விவசாய நிலத்திற்கு இடையே சுடுகாடு பாதைக்காக அரசு சார்பில் சாலை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து ஏழுமலை என்பவர் மகன் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார் இந்த நிலையில் இன்று அதே பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக தடை உத்தரவு பிறப்பித்துள்ள வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்ததால் இருந்த மூதாட்டியின் உடலை சாலையிலே வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து அங்கிருந்த கரும்பு தோட்டங்கள் வழியாக மூதாட்டியின் உடலைஎடுத்துச் சென்றனர்.

இதனால் கரும்பு தோட்டத்தில் இருந்த கரும்பு பயிர்கள் முழுவதும் சேதமடைந்தது. இதே கிராமத்தில் அந்த சுடுகாடுக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது.

அதில் சுடுகாடு அமைத்தால் எந்த தரப்பிற்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.