கோவை வ.உ.சி மைதானத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் 5 சென்ட் இடத்தில் ஏழு அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனருக்கு முழு உரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்வுக்கு பின் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி. சிலைக்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கோவை பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் வ. உ.சி-யின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை திறப்பிற்கு வந்திருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.கோவையில் சுதந்திரத்திற்காக போராடிய செக்குழுத்த செம்மல் வ.உ சிதம்பரனாருக்கு சிலை அமைத்திருப்பது மகிழ்ச்சி. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வ.உ.சி சிறையில் இருந்த போது எழுதிய மெய்யறம் என்ற நூலை பள்ளி குழந்தைகளின் பாட புத்தகத்தில் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்.
மெய்யறம் என்ற நூல் ஆத்திச்சூடி போன்று ஒரு வரியில் உயர்ந்த கருத்துக்களை கூறக்கூடியது.அந்த நூல் மக்களுக்கு சென்று சேரும்பொழுது தனது தமிழ் புலமையை கூட மக்களின் நன்மைக்காக செலவழித்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.