அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்த இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு குழுவினர் நெல் மணிகளை ஆய்வகத்தில் பரிசோதித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், நெல் கொள்முதலை 19 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், காலம் தாழ்த்தி மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீதம் போதாது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டு நெல்லிற்கான ஈரப்பதத்தை மாற்றி மாற்றி அறிவிக்காமல், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அனைத்து காலங்களிலும் நெல்லிற்கான ஈரப்பதத்தை ஒரே சீரான சதவீதத்தை அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.