தமிழகம்

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா – நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் நடக்கவுள்ள ஆட்டத்தில் மோதவுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

எனவே, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம், இருநாட்டு ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

காரணம், இந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை கேப்டனும், தொடக்க வீரருமான சுப்மன் கில், “இதுவரை நாங்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம்.

எனவே, இது குறித்து அவர் என்னிடமோ அல்லது அணியிடமோ இதுவரை பேசவில்லை. ஏன், ரோகித் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று கூட நான் நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார். முன்னதாக, 2019 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் 2023 உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் தலைமையிலான நீலப்படை தோல்வியுற்றது.

இதையும் படிங்க: ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

அதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடிவரும் ரோகித் சர்மா, சமீப காலமாக ரன்களைக் குவிப்பத்தில் பின்னடைவைச் சந்தித்தார். மேலும், வெறும் 104 ரன்கள் குவித்து 26வது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா உள்ளார். அதேபோல், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சனுக்கும் இதுவே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் வென்ற பிறகு டி20 போன்ற போட்டியில் இருந்து மூத்த வீரர்களான கோலியும், ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். எனவே, இன்று போட்டி முடிவுற்ற பிறகு கோலியும் ஒருவேளை ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிகிறது.

Hariharasudhan R

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

21 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

25 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

45 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

57 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.