Categories: தமிழகம்

ஆளுநரின் Tea party தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.. ஆனா ஒரேயொரு டிவிஸ்டு..!

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் திமுக சார்பில் ஆளுநரின் தேர்நீரில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

அதேபோல், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படித்தான் தேநீர் விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என்றார்.

இதேபோல், திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தில் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில், பங்கேற்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இதன் பின்னர், பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருதில் பங்கேற்பார் என தெரிவித்திருந்தார். அதாவது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.