நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் திமுக சார்பில் ஆளுநரின் தேர்நீரில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
அதேபோல், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படித்தான் தேநீர் விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என்றார்.
இதேபோல், திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தில் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில், பங்கேற்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இதன் பின்னர், பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருதில் பங்கேற்பார் என தெரிவித்திருந்தார். அதாவது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.