விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 3 -வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, மற்றும் சுயட்சை கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சுயேச்சையாக குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் குலாலர் தெருவை சேர்ந்த வேட்பாளர் சுப்புலட்சுமி என்பரவது கணவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் தேர்தல் போட்டியின் காரணமாக தீ வைக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் இருசக்கர வாகனத்திற்க்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.