விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 3 -வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, மற்றும் சுயட்சை கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சுயேச்சையாக குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் குலாலர் தெருவை சேர்ந்த வேட்பாளர் சுப்புலட்சுமி என்பரவது கணவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் தேர்தல் போட்டியின் காரணமாக தீ வைக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் இருசக்கர வாகனத்திற்க்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.