இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் படுதோல்வியை சந்தித்தது.இதனால் பல முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நாளை நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி பிரச்சனை காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவலை அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.அவருக்கு பதிலாக பிரதீப் கிருஷ்ணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: தொடர் தோல்வியால் கடுப்பான கம்பீர்…ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அதிரடி முடிவு..!
அதே சமயம் வாஷிங்டன் சுந்தரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.இதனால் அவருக்கு பதிலாக யார் விளையாடப்போகிறார் என்பதை நாளை தெரிய வரும்.இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவலும் வந்துள்ளது. WTC தொடருக்கு,நாளை நடைபெறும் போட்டி இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு என்பதால்,ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.