இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் படுதோல்வியை சந்தித்தது.இதனால் பல முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நாளை நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி பிரச்சனை காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவலை அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.அவருக்கு பதிலாக பிரதீப் கிருஷ்ணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: தொடர் தோல்வியால் கடுப்பான கம்பீர்…ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அதிரடி முடிவு..!
அதே சமயம் வாஷிங்டன் சுந்தரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.இதனால் அவருக்கு பதிலாக யார் விளையாடப்போகிறார் என்பதை நாளை தெரிய வரும்.இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவலும் வந்துள்ளது. WTC தொடருக்கு,நாளை நடைபெறும் போட்டி இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு என்பதால்,ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.