இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும்,கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய அணியில் விராட்கோலி,ஜெய்ஸ்வால்,கே எல் ராகுல்,ஜடேஜா,அக்சர் பட்டேல்,வாஷிங்க்டன் சுந்தர்,ரிஷப் பந்த்,ஹர்திக் பாண்டியா,குல்தீப்,ஷமி,அர்ஷிதீப் சிங்,ஷ்ரேயஸ் ஐயர்,பும்ரா உள்ளிட்ட 15 வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்,தற்போது பும்ராவின் மருத்துவ அறிக்கைக்காக இந்திய அணி காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்க: ரிங்கு சிங்குடன் என் மகளுக்கு நிச்சயதார்த்தமா…யாரு சொன்னா…பெண் எம்.பி-யின் தந்தை ஆவேசம்.!
மேலும் கடந்த ஒரு வருடமாக காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி இந்த தொடரின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.இந்த தொடரை பாகிஸ்தான் நிர்வாகம் நடத்தினாலும்,இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாய் மைதானங்களில் நடைபெற உள்ளது.
மேலும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு மாற்றத்துடன்,பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட உள்ளார்.மற்றபடி இதே அணியுடன் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.இந்த தொடர் வருகின்ற 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிகள் வீரர்களுக்கு ஒரு முக்கிய சவாலான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.