விரைவில் இந்தியன் 2 படபிடிப்பு.? இயக்குநர் சங்கர் சூசகமாக அறிவிப்பு!

கமல் 2 வேடங்களில் நடித்து 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. வழக்கம்போல இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் உருவாக்கியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. க்ளைமேக்ஸில் அப்பா கமல் சேனாபதி தப்பிச் சென்று, வெளிநாட்டில் இருந்து போன் பேசுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு லைகா தயாரிப்பில், கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக இசையமைப்பதற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்னை, கிரேன் விபத்தில் 3 பேர் பலியானது, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் உற்சாகமாக உள்ள கமல், இந்தியன் 2 படத்திற்கு ரெடியாக இருக்குமாறு ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு ட்வீட் செய்திருந்தார். டான் பட சக்சஸ் விழாவில் பேசிய உதயநிதி, விரைவில் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தின் டிஸ்ப்ளே பிக்சரில் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை வைத்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் இந்தியன் -2 படம் விரைவில் துவங்கப்படும் என இயக்குனர் ஷங்கர் சூசகமாக தெரிவித்து இருப்பதாக நெட்சன்கள் தெரிவித்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.