புதுக்கோட்டையில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்தது குறித்து பெண்ணின் கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செங்கீரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் – அபிராமி தம்பதி. அபிராமி, சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், கணவர் ராஜசேகரனுக்கு அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அபிராமிக்கு நேற்று பிரசவ வலி வந்து உள்ளது. அப்போது, அவரை ராஜசேகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதேநேரம், யூடியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி எனப் பார்த்துள்ளார். பின்னர், தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து, அபிராமியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து அபிராமிக்கு யூடியூப் பார்த்தபடியே பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் 3 பேரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் உள்பட மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர், இதுகுறித்து அபிராமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது அபிராமியின் உடல்நிலை மோசமாக இருந்து உள்ளது.
இதையும் படிங்க: இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!
இதனிடையே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் இது குறித்து ஆவுடையார் கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.