புதுக்கோட்டையில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்தது குறித்து பெண்ணின் கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செங்கீரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் – அபிராமி தம்பதி. அபிராமி, சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், கணவர் ராஜசேகரனுக்கு அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அபிராமிக்கு நேற்று பிரசவ வலி வந்து உள்ளது. அப்போது, அவரை ராஜசேகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதேநேரம், யூடியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி எனப் பார்த்துள்ளார். பின்னர், தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து, அபிராமியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து அபிராமிக்கு யூடியூப் பார்த்தபடியே பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் 3 பேரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் உள்பட மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர், இதுகுறித்து அபிராமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது அபிராமியின் உடல்நிலை மோசமாக இருந்து உள்ளது.
இதையும் படிங்க: இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!
இதனிடையே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் இது குறித்து ஆவுடையார் கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.