பழனி அருகே புறவழிச் சாலையில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அடுத்த சண்முக நதி புறவழிச் சாலையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத இறந்த குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்றவர்கள் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற பழனி நகர காவல் நிலைய போலீசார் பார்த்தபோது வீட்டில் பிரசவமான குழந்தையை தொப்புள் கொடி அகற்றாத நிலையில், சடலமாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
உடனடியாக குழந்தையின் சடலத்தை மீட்பு பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை பெற்ற தாய் யார்? குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் வீசி சென்றனரா ?அல்லது உயிருடன் வீசிச் சென்றனரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி புறவழிச் சாலையில் இறந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.