பழனி அருகே புறவழிச் சாலையில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அடுத்த சண்முக நதி புறவழிச் சாலையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத இறந்த குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்றவர்கள் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற பழனி நகர காவல் நிலைய போலீசார் பார்த்தபோது வீட்டில் பிரசவமான குழந்தையை தொப்புள் கொடி அகற்றாத நிலையில், சடலமாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
உடனடியாக குழந்தையின் சடலத்தை மீட்பு பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை பெற்ற தாய் யார்? குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் வீசி சென்றனரா ?அல்லது உயிருடன் வீசிச் சென்றனரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி புறவழிச் சாலையில் இறந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
This website uses cookies.