நண்பனின் மாமியார் மீது தீராத மோகம்… தனிமையில் அடிக்கடி உல்லாசம் : நள்ளிரவில் நடந்த ஷாக்.. புதுச்சேரியில் கச்சேரி!!
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் பகுதியில் வசிப்பவர் துரைசாமி . இவரது மகன் கோபி (வயது 26 ). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அதே மொரடாண்டி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை தனசேகர் மகன் கவுதம், (வயது 22 ) வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கோபியும் கௌதமும் நண்பர்கள் ஆவர்.
நேற்றைய முன்தினம் 19ஆம் தேதி இரவு வீட்டில் தனியார் இருந்துள்ளார் கோபி,. அப்போது அங்க வந்த கவுதம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தண்ணீர் கொண்டு வந்த சமயத்தில் திடீரென கவுதம் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியை எடுத்து கோபியை தலையில் பின்பக்கமாக பலமுறை தாக்கி உள்ளார்.
இதையடுத்து நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் கோபி. அங்கிருந்த கவுதம் உடனே தப்பி ஓடினார். கோபியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஆரோ காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வந்த போலீசார் ஆபத்தான நிலையில் உள்ள கோபியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கவுதம் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
பின்னர் விசாரணையில், கவுதமின் மாமியாரான சசிகலா (வயது 40) அதே பகுதியில் இரவு நேர உணவகத்தை நடத்தி வருகிறார். அவ்வப்போது கடைக்கு செல்லும் கோபி சசிகலாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.
இதையறிந்த கவுதம், கோபியை எச்சரித்துள்ளார். ஆனால் நண்பன் முக்கியமல்ல, மோகம்தான் முக்கியம் என கள்ளதொடர்பில் இருந்து விடுபடாமல் சசிகலாவுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபியை தீர்த்துக்கட்ட சுத்தியை எடுத்து சென்று தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து கவுதமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.