தமிழகம்

இந்தி மட்டும்தான் தெரியும்.. சூப்பில் மிதந்த பூச்சி.. கோவை ஹோட்டலில் பரபரப்பு!

கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆர்டர் செய்த சூப்பில் பூச்சிகள் மிதந்ததற்கு உணவகம் தரப்பில் அலட்சியமாக பதில் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், அப்பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில், சிக்கன் வான்டன் சூப்பை ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் ஆர்டர் செய்து உள்ளார். பின்னர், அந்த சூப்பை அவரது மூன்று வயது குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

பின்னர், பாதி சூப் சாப்பிட்ட பிறகு, அதில் பூச்சிகள் மிதந்துள்ளது. இதனைக் கண்ட கார்த்திகேயன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஆன்லைன் ஆர்டர் செயலி மற்றும் உணவகத்திடம் புகார் அளித்துள்ளார். முதலில், ஆன்லைன் செயலி தரப்பில் உணவுத் தரத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல எனக் கூறி முடித்துள்ளனர்.

அதேபோல், உணவகத்தினர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் கூறுகையில், “சுங்கம் பகுதியில் உள்ள சைனா வேலி ரெஸ்டாரண்டில் ஸ்விகி மூலம் சூப் ஆர்டர் செய்தேன். அதனை நானும், அவரது 3 வயது மகளும் பாதி அருந்திவிட்டு பார்த்தபோது தான், அதில் சிறிய அளவிலான நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் மிதந்தது தெரிந்தது.

பின்னர், இதுகுறித்து ஸ்விகியிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள் டெலிவரி பார்ட்னர் மட்டும் தான் எனக் கூறிவிட்டு உணவகத்தை தொடர்பு கொள்ளக் கூறினர். அந்த சைனா வேலி உணவக அதிகாரிகள் எதுவும் கூறாமல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இந்தியைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனக் கூறி மெத்தனமாக பதில் அளித்தனர். சரியான பதில் கூட கூறவில்லை.

இதையும் படிங்க: கம்பளம் விரித்தாரா விஜய்? இன்று மாலை அறிவிக்கும் காளியம்மாள்!

அதேநேரம், அதன் மேலாளர், வாண்டன் சூப்பில் உங்களுக்கு ஏதோ பிரச்னை இருந்ததாக நீங்கள் ஹைலைட் செய்து உள்ளீர்கள் எனக் கேட்டு உள்ளனர். அந்த சூப்பில் இருந்த பிரோகாலியில் இருந்து அந்தப் பூச்சி வந்து இருக்கலாம் எனவும், இதைப் பற்றி புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

3 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

4 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

5 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

6 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

6 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

6 hours ago

This website uses cookies.