தமிழகம்

புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை காதலில் விழ வைத்த இன்ஸ்பெக்டர்.. உல்லாசத்தால் பறி போன பதவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரகர்கள் தகராறு செய்வது தொடர்பாக கடந்த 4 மாதம் முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கூறினார்.

அந்த சமயம் இரவுப் பணியில் இருந்து விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசரணை நடத்தி பிரச்சனையை தீர்தது வைத்தார்.

இதையும் படியுங்க: ஊழியரை கடத்தி மிரட்டல்? பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் : போலீசார் வழக்குப்பதிவு!

இதற்காக இன்ஸ்பெக்டருக்கு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினமும் இளம்பெண்ணுக்கு குட் மார்னிங், குட் நைட் என மெசேஜ் செய்து வந்துள்ளார்.

நாளடைவில் சகஜகமாக இருவரும் பழக, தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். மேலும் இளம்பெண்ணை காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றியுள்ளனர். பல நேரங்களில் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என இளம் பெண் வற்புறுத்தவே, தொடர்பை துண்டித்துள்ளார் இன்ஸ்பெக்டர்.

மேலும் இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய பெரிய பிரச்சனையானது. இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை முயற்சி செய்ததால், இளம்பெண்ணுடன் முற்றிலும் தொடர்பை துண்டித்துள்ளார் கண்ணன்.

மேலும் தனக்கு விவாகரத்து ஆக வில்லை எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன், என்னை தொந்தரவு செய்யாதே என கூறி ஒதுங்கியுள்ளார்.

ஆனால் இளம்பெண் அதை ஏற்க முடியாமல், கண்ணனை தொந்தரவு செய்துள்ளார். இதனால் இளம்பெண் மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன இளம்பெண் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருகம்பாக்கத்தில் இருந்து மயிலாப்பூருக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு, இளம்பெண் மீண்டும் கண்ணனை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால், ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்துள்ளார்.

ஆனால் அது பற்றி அவர்கள் கண்டுகொள்ளாததால், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷ்னர் சிபி சக்ரவர்ததியிடம் இளம்பெண் புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்களை ஆதாரமாக காட்டி புகார் அளிதார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டரை விசாரிக்க அழைத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டரோ மருத்துவ விடுப்பு எடுத்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து காத்திருப்போர் பட்டியலில் கண்ணை மாற்றி உத்தரவிட்ட இணை கமிஷ்னர், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மையை அறிந்து கொண்டார். மேலும் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியாக இருந்த கார் ஓட்டுநர்களான காவலர்கள் என அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.