நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியனோடு நேருக்கு நேர் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல 24 மணி நேரமும் நீட் பற்றி தாம் விவாதிக்க தயார் என்றும் நீட் என்ற விதை யாருடைய ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்டது என்பதை பற்றியெல்லாம் பேசலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக நடத்தும் மாநாட்டை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தான் ஆகஸ்ட் 20ஆம் தேதி பயத்தில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று சொன்னது யார் என்றும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தான் அப்படி கூறி வாக்குகள் பெற்றார்கள் எனவும் கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடக்கூடாது என சாடிய விஜயபாஸ்கர், எல்லா நிகழ்வையும் தாண்டி அதிமுக மாநாடு வெற்றிபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார்.
இதனிடையே கொடுத்த வாக்குறுதி என்னவானது என மக்கள் திமுக அரசை பார்த்து கேட்கத் தொடங்கிவிட்டதாக சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.