Categories: தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொலைந்து போன சாவிகள்…உடைக்கப்பட்ட பூட்டுக்கள்…!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்.

சென்னை மாநகராட்சியில் 175-வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது. சாவியை தொலைத்தவர்கள் யார் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதிக்குட்பட்ட வ.புதுப்பட்டி ஊரில் உள்ள பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி காணாமல் போகியுள்ளது.

இதனால், சாவியை அதிகாரிகள் தேடிப்பார்த்தனர். ஆனாலும், சாவி கிடைக்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதையடுத்து, அந்த அறையின் பூட்டை வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் முன்னிலையில் உடைத்து, வாக்குப்பெட்டிகளை எடுத்தனர். பின்னர், வாக்கு எண்ணிக்கை பணியை தொடங்கியுள்ளனர்.  

இதே போல கடலூர் நகராட்சியில் ஸ்ட்ராங் ரூம் சாவி மாயமானதால் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானது. இதனையடுத்து ஸ்ட்ராங் ரூமின் பூட்டு அறுக்கப்பட்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன. சாவியை தொலைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயப்போகிறது என்று தெரியவில்லை.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

18 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

19 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

21 hours ago

This website uses cookies.