தமிழகம்

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை.

அப்போது, அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அப்போது, அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகளும் அரசியல் மேடையில் பெரும் பேசுபொருளானது.

இதனிடையே, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பு, இந்த வழக்கு ஏற்கெனவே மூன்றுமுறை தொடரப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. புதிய அரசு ஆட்சியமைத்ததும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது” என வாதிடடப்பட்டது.

இதையும் படிங்க: டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்த பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்த பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நான் வரவேற்கிறேன். இருதரப்பும் அமர்ந்து இந்த வழக்கில் பேச தகுதியற்றது” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.