தமிழகம்

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை.

அப்போது, அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அப்போது, அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகளும் அரசியல் மேடையில் பெரும் பேசுபொருளானது.

இதனிடையே, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பு, இந்த வழக்கு ஏற்கெனவே மூன்றுமுறை தொடரப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. புதிய அரசு ஆட்சியமைத்ததும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது” என வாதிடடப்பட்டது.

இதையும் படிங்க: டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்த பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்த பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நான் வரவேற்கிறேன். இருதரப்பும் அமர்ந்து இந்த வழக்கில் பேச தகுதியற்றது” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

17 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

18 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

18 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

18 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

19 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

19 hours ago

This website uses cookies.