இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்க உள்ளது.இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படியுங்க: அவமானம்.!தங்கச்சி புருஷன் செய்த மோசடி…தலைகுனிந்த விஷால்.!
சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ்,பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,குஜராத் டைட்டன்ஸ்,லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன.
நாளை தொடங்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நேற்று,10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.மேலும், இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதாவது இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடும்.இதனால் பவுலர்கள் சரியாக பந்து வீச முடியாது,அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்கள் குவிக்க முடிகிறது.இதை கருத்தில் கொண்டு,ஐபிஎல் நிர்வாகம் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது.
முதல் 10 ஓவர்கள் முடிந்த பிறகு,பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக அணியின் கேப்டன் நினைத்தால்,நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரலாம். நடுவர் களத்தின் நிலைமையை பார்வையிட்டு,அதன் அடிப்படையில் பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார்.
இந்த புதிய விதி முறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
This website uses cookies.