விளம்பரத்தில் நடித்ததால் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு சிக்கலா? நகை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை வைத்த ட்விஸ்ட்!!!
திருச்சியில் பிரபலமான நகைக்கடையாக செயல்பட்டு வந்தது பிரணவ் ஜுவல்லரி. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
திருச்சியில் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இந்த நகைக்கடையில் கிளைகள் தொடங்கப்பட்டது. பழைய நகைகளை தங்களிடம் கொடுத்து, ஒரு வருடத்திற்கு பின், எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம் என விளம்பரப்படுத்தினர்.
இந்த விளம்பரத்தை நம்பிய பொதுமக்கள் பலர் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தை கட்டியது மட்டுமல்லாமல், பழைய நகைகளை கொடுத்து, ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை பெற்றுக் கொள்வதற்கும் காத்திருந்தனர்.
ஆனால், பிரணவ் ஜுவல்லரி தங்களது நகைக்கடைகளை இழுத்து மூட தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தநிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், கணக்கில் வராத சுமார் 23.70 லட்சம் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி பிரணவ் ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.