தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர்? நீதிமன்றம் GREEN சிக்னல்.. EC அதிரடி!
கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட பாஜக பிரமுகர் சசிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் மாணிக்கம் தாகூரின் கட்சியினர், அவரது கூட்டணி கட்சி முகவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி சீனி, கருப்பையா, காமராஜ் மீது மதுரை, விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணிக்கம் தாகூர் தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், இன்னும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பட்டுவாடா நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
மேலும் படிக்க: TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… தமிழக அரசை மனதார பாராட்டி ராமதாஸ் கொடுத்த IDEA!
அப்போது, மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் புகார் தொடர்பான மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனை ஏற்று இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.? மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா.? அப்படி தள்ளுபடி செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரிந்து விடும்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.