Categories: தமிழகம்

கோவையில் அதிகம் பரவுகிறதா டெங்கு? சிகிச்சை முகாம்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!

கோவையில் அதிகம் பரவுகிறதா டெங்கு? சிகிச்சை முகாம்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக முழுவதும் டெங்கு போன்ற மழைக்கால நோய் தடுப்பு முகாம்கள் ஆயிரம் முகங்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி ஆயிரம் முகாம்கள் என்பது 1300 முகாம்களாக இன்று உயர்ந்து 1300 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையை பொறுத்த வரை 107 இடங்களில் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சேலத்தில் 189 இடங்களிலும் மதுரையில் 129 இடங்களிலும் சென்னையிலும் திருச்சியிலும் தலா 45 இடங்களிலும் நீலகிரியில் 12 இடங்களிலும் என்று மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநகராட்சிகளும் நான்கு இடங்களிலும் சென்னையை பொருத்தவரை 15 மண்டலங்களிலும் 45 என்கிற அடிப்படையிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த 1300 முகாம்களிலும் பல்லாயிரக்கணக்கான பேர் பலன் பெற்று வருகின்றனர்.டெங்கு லெப்ட்ரோ ஃபைரோஸிஸ் பைபாஸ் ப்ளூ போன்றவை உறுதி செய்யப்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.கோவையை பொறுத்தவரை 107 முகாம்களில் இதுவரை 2354 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் டெங்குவிலிருந்து மக்களை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் டெங்கு போன்ற நோய்கள் கட்டுக்குள் இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை 4354 பேருக்கு பாதிப்பு இருந்தது.

குறிப்பாக நேற்று மட்டும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 363 பேர் என இருந்தார்கள்.இந்த 363 பேரில் கோவையில் 10 பேர் என்ற வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.யாருக்கும் பெரிய அளவிலான உயிர் பாதிப்பு என்பது இல்லை.

ஏற்படுகின்ற பாதிப்பு என்பது ஆறாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை வரும் தென்மேற்கு மற்றும் பருவமழை ifsc கடந்து வெப்பச்சலன மழை, கோடை மழை என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை பெய்வதினால் ஆங்காங்கே நீர்த்தேக்கம். அதனால் உருவாகின்ற ஏடிஸ் கொசுக்கள் அதன் காரணமாக உருவாகின்ற டெங்கு போன்றவை இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாவட்ட ஆட்சியின் நிர்வாகங்களும் உள்ளாட்சி நிர்வாகம் முதல்வரின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு அக்டோபர் வரை 454 பேர் என்கின்ற அளவில் பாதிப்பு இருக்கிறது.

டெங்குவை பொறுத்த வரை டெங்கு கண்டறியப்பட்டு 2012 ஆம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்த ஆண்டுக்கான மரணம் 13 பேர் அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு உள்ளாகி 65 பேர் மரணம் அடைந்தனர்.இந்த இரண்டு ஆண்டுகள் தான் அதிகபட்ச மரணங்கள் தமிழகத்தில் பதிவானது. தொடர்ந்து மற்ற ஆண்டுகளில் ஓர் இலக்க பாதிப்பு தான் பதிவானது.

அதுவும் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஆண்டு இதேபோல் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் தேவைப்பட்டால் இந்த வடகிழக்கு பருவமழை முடியும் வரை இந்த முகாம்கள் நீடிக்கப்படும் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

22 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

24 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

24 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

24 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.