தமிழகம்

மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தா? விளாசும் காங்., எம்பி!

திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அதிமுக – பாஜக தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு

காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்.
இந்திய அளவில் இந்தியா கூட்டணியை காங்கிரஸ் தலைமை தாங்குகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முழு தயாராக உள்ளோம்.

அமலாக்கத்துறை சோதனை என்பது வரும் தேர்தலில் அரசியலை பாதிக்குமா? என்பது குறித்த கேள்விக்கு, எந்த மாநிலத்திலும் மத்திய அரசு ஏஜென்சி மூலம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியலை பாதிக்காது.

பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை முடக்குவதற்காக பயன்படுத்தும் ஏஜென்சிகளாக தான் நான் பார்க்கிறேன் தவிர தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்த கேள்விக்கு, 234 தொகுதிகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் பொறுத்து அந்த நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.

துணை முதல்வர் பதவி உட்பட எதையும் முன்வைக்கவில்லை. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். சுமுகமாக தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பொறுத்து தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் ஆதரவு கருத்து கூறுபவர்கள் பாகிஸ்தானிற்கு செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புரிந்து பேசுகிறாரா? இல்லை புரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினாலே அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தா? ஆப்ரேஷன் செந்தூர் நடந்ததுக்கு பின்பு அனைத்து இந்திய மக்களும் இந்திய ராணுவத்திற்கு பின்பே இருக்கிறோம்.

இந்திய ராணுவத்தையோ? இந்திய அரசையோ? குறை சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினார்கள் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும்.

பஹல்காம் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியாக, ராஜாங்க ரீதியாக, அழுத்தத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்.

மற்ற சம்பவத்தையும் இதையும் ஒப்பிட முடியாது. இது மத ரீதியாக பிரித்து மக்களை கொன்று உள்ளனர். பாகிஸ்தான் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும் வரை அழுத்தம் கொடுத்து தான் ஆக வேண்டும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.