கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பு நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும்.
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமை செயலகமாக மாறாது. 500க்கும் மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன், மீண்டும் சட்டப்பேரவையாக மாற்றப்படாது என்றார்.
இதுதொடர்பாக மேலும் கூறுகையில், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்ததுக்கு பிறகு தான், இந்த மருத்துவமனையை கட்ட தொடங்கினர்.
அதுமட்டுமில்லாமல் பன்னோக்கு மருத்துவமனை என்ற பெயரை மட்டுமே இருந்ததை தவிர சிறப்பு மருத்துவ வசதிகள் எதுமே இல்லாமல் இருந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் 34 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய்க்கான அதிநவீன கருவியை திறந்து வைக்கப்பட்டது. கருவில் இருக்கும் குறை தன்மையை கண்டறியும் ஆய்வகத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டும் முதன் முதலில் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு மருத்துவ வசதிகள் இந்த ஓராண்டில் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ சேவையும், தேவையும் அதிகரித்து வருவதால் எந்த சூழலிலும் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கமளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.