Categories: தமிழகம்

பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு!!

பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு!!

ஆவடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இவ்வாறு தெரிவித்து, செந்தில் பாலாஜி அமைச்சராக தற்போது இருந்து வருகிறார் என கூறினார்.

இதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்க மறுத்த, ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்க தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.

2010ல் அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர். எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இலாகா மாற்றுவது குறித்து ஆளுநர் என்ஆர் ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர், அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநரை திருப்பி அனுப்பியதற்கு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரை கடிதத்தை அனுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளான மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், செந்தில் பாலாஜி குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சராக தொடர முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என திமுக அரசு அறிவித்தது.

மறுபக்கம், செந்தில் பாலாஜி பதவி நீக்க வேண்டும், அமைச்சராக தொடர கூடாது என எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.