தமிழ்நாட்டில் எந்த அலை வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்துவரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகி வருவதாகவும், அதே நேரத்தில் வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 20 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது ஓமந்தூரர் மருத்துவமனையில் 11 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தயாராக இருப்பதாகவும், 9 மாதங்களுக்கு பிறகு குறித்த நேரத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவ தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.