அவசர திருமணத்திற்கு இப்படி ஒரு பின்னணி காரணம் இருக்கா.? புது கணக்கு போடும் நயன்தாரா.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தின் போது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரும் எப்போது, திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவ்வப்போது இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி கொண்டிருந்தனர். இப்பொழுது திடீரென்று கல்யாணத்திற்கு அவசரப்பட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு காரணம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நயன்தாராவுக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து, நடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை அங்கு ஒரு ரவுண்டு வரலாம் என எதிர்பார்க்கிறார். அதனால் தான் கல்யாணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு திட்டம் போட்டு இருக்கிறாராம் நயன்தாரா.

மேலும் இந்த நேரத்தை விட்டால் திருமணம் இன்னும் தள்ளிப்போகும் என்பதற்காக வேகவேகமாக திருமண ஏற்பாடுகளை திருப்பதியில் செய்துகொண்டிருக்கின்றனாரம். இதற்காகவே மட்டும் ஒரே வாரத்தில் இரண்டு முறை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று அங்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

UpdateNews360 Rajesh

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 hour ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

1 hour ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

2 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

2 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

3 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

3 hours ago

This website uses cookies.