உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் மண் வளத்தை பாதுகாப்பது குறித்தும், வெப்பமண்டல நிலப் பகுதிகளில் அதன் தொடர்பு குறித்தும் ஒரு அர்த்தமுள்ள கலந்துரையாடல் நிகழ்த்தினேன். இவ்விஷயத்தில் சரியாக கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் வளமான மண் மற்றும் பொருத்தமான பருவநிலையால், அந்நாட்டிற்கும், அந்நாட்டு விவசாயிகளுக்கும் ஒரு வளமான சூழலை உருவாக்க முடியும்” என பதிவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த உலக பருவநிலை மாநாடு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்களும் கலந்து கொண்டு மண் வளப் பாதுகாப்பு குறித்து பல்வேறு அமர்வுகளில் சிறப்புரையாற்றி வருகிறார்.
முன்னதாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற தொடக்க விழா நிகழ்விலும் சத்குரு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.