கோவையில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் கடந்த சில தினங்களுக்கு, முன்னர் சிலிண்டர் விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், இந்த இறப்புக்கு முறையான நீதி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கன்டன ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சிஐடியு அமைப்பின் கோவை மாவட்ட செயலாளரும், பிபிசிஎல் தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கடந்த 28″ம் தேதி பாரத் கேஸ் உபயோகித்து வருகின்ற மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி, என்பவரது வீட்டில் கேஸ் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுமதி, லலிதாம்பிகை, திலிப்குமார், தினேஷ்,என நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்கள். இவர்கள் நான்கு பேரும் உயிரிழந்துவிட்டதற்கு பி.பி.சி.எல் நிறுவனம் தான் முழுக்க முழுக்க காரணம் எனவும் காலாவதி ஆகிபோன கேஸ் சிலிண்டரில் கேஸ் நிரப்பி அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் இந்த நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் குடும்பத்தில் மீதமுள்ள கர்ப்பிணிப் பெண்ணான சரண்யாவிற்கு பாரத் கேஸ் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வேலையை வழங்குமாறும் தெரிவித்த நிலையில் இக்கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் அதுவரை அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் உள்ள தினேஷ் மற்றும் திலீப்பின் உடல்களை வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.