தமிழகம்

புஸ்ஸிக்குத் தெரிந்தே பணம் கைமாற்றம்.. கொதிக்கும் விழுப்புரம் தவெக.. நடந்தது என்ன?

விழுப்புரம் தவெகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் தவெகவில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாவட்டச் செயலாளர் பதவிகள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்ததாக மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில், பல மாவட்டங்களில் நகரச் செயலாளர் பதவிக்கு 10 லட்சம், ஒன்றியச் செயலாளர் பதவிக்கு ஒரு லட்சம் ருபாய் என பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், எப்போதும் தவெகவுக்கு தலைவலியாக இருக்கும் விழுப்புரம் தவெகவில், பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று விழுப்புரம் மாட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள், விழுப்புரம் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், “நகர மற்றும் மாவட்ட அளவிலான பதவி வழங்க விழுப்புரம் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன், 3 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்கிறார். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது.

மாற்றுக் கட்சியில் இருந்து ஒரு வாரம் முன்பு வந்த முபாரக் என்பவருக்கு நகரச் செயலாளர் பதவி வழங்கியுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தெரிந்தே பணம் வசூல் நடைபெறுகிறது. தலைவர் விஜய்க்கு தெரிவிக்கவிடாமல் ஆனந்த் தடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

ரூ.4 லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால், எனக்கு பதவி கொடுக்கவில்லை. பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது தவெக பொறுப்புக்காகப் பணம் கட்டிய காசோலையை நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு குஷி மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏற்கனவே பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாக எழுந்த பிரச்னைக்கு, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் விழுப்புரத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

22 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

23 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

23 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

23 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

23 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.