நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 21 உயிர்களை இழந்துள்ளோம். நீட் தேர்வு உயிரிழப்பிற்கு மத்திய அரசும் அதிமுகவும் தான் காரணம்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் நீட்டால் உயிரிழந்தவர்களின் அண்ணனாக பங்கேற்றுள்ளேன். அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என்றுதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
கவர்னர் வெறும் தபால்காரர், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக மக்களைப் பற்றி கவர்னருக்கு ஒன்றும் தெரியாது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் தேர்தலில் நிற்க கவர்னர் ரவி தயாரா? கவர்னர் ரவியை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாதா? உங்கள் சித்தாந்தங்கள் இந்த மண்ணில் எடுபடாது.
தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. பாஜக, அதிமுகவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தமிழக மாணவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். நீட் என்பது தகுதியற்ற தேர்வு, நீட் தேர்வை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடியல். நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் மட்டுமே. டெல்லியில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்த அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கிறேன். அதிமுகவினர் எங்களுடன் வாருங்கள், பிரதமர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து நீட்டுக்கு எதிராக போராடுவோம். ஒன்றாக போராடி நீட் தேர்வு ரத்தானால் அந்த வெற்றியை அதிமுகவே வைத்து கொள்ளட்டும் என கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.