Categories: தமிழகம்

மோடி ஆட்சி அமைப்பது மகிழ்ச்சி… இலங்கை தமிழர்களை கொன்றவர்கள் வெற்றி பெற்றிருப்பது வருத்தம் : மதுரை ஆதீனம்!

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் எனவும், தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள், சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள்.

ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை

மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன், மோடி மீண்டும் பிரதமர் ஆனது ரொம்ப மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தமிழக மக்களின் முடிவெடுத்தது சரியானது.

மோடியை நீங்கள் ஆதரிக்க காரணம் ? என்ற கேள்விக்கு : இலங்கை தமிழர்களுக்கு வீடு கொடுத்திருக்கிறார். தமிழீழம் கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துங்கள் என என்னிடம் சீமான் தரப்பில் என்னிடம் கூறினார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியது தொடர்பான கேள்விக்கு ? நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார்.

தற்போது பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது என்ற கேள்விக்கு ?
காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால் திட்ட தான் செய்வார்கள் எனவும், திட்ட திட்ட திண்டுக்கல்லு வைய வைய வைரக்கல்லு , ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார் என்றார்.

அயோத்தில் பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு?
அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள்., இது ஜனநாயக நாடு வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான், மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை என்றார்

காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன்.

மோடியை ஏன் பிடிக்கும்- என்ற கேள்விக்கு? மோடி தியானம் பண்ணுகிறார், ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து உறங்கினார், விபூதி அணிகிறார், கடவுள் இல்லை என்று சொல்லாதவர், சவுதி அரேபியா போகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்த கேள்விக்கு? அதிமுக கூட்டணி வைத்திருந்தால் அதிமுக வெற்றிபெற்றிருக்கும், நாம் தமிழர் கட்சி சீமான் தனது கட்சியை நன்கு கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார்.

இலங்கைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு? நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்றார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

13 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

15 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

15 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

16 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

16 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

17 hours ago

This website uses cookies.